8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!
காவல்துறை உதவிஆய்வாளர் மீது புகார்
சென்னை, ஜூலை 1- சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி ஆய்வாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரு கிறார். இந்த நிலையில் ஞாயிறன்று வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென காணாமல் போய்விட்டாள். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இருப்பினும் மாண வியை 3 மணி நேரத்துக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப் படை உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் அந்த மாணவி இருப்பதாக உற வினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிறுமி மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி உதவி ஆய்வாளர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முறையாக பதிலளிக் கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாண விக்கு உதவிஆய்வாளர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி அன்று நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மயக்க ஊசியா? இது பற்றிய தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். அப்போது மாணவி யின் உறவினர்கள் சிலரை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றுள் ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்க ளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். “உரிய முறையில் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுப்பத ற்காக தான்நாங்கள் வந்துள்ளோம். எனவே அமைதியாக இருங்கள்” என்று மாணவியின் உறவினர்களி டம் போலீசார்கேட்டுக் கொண்ட னர். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். பாதிப்புக்குள்ளான மாணவி யிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாலை 6 மணிக்கு பிறகு தனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. தான் மயக்கமாகி விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா என்பது பற்றி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.