விழுப்புரம், பிப்.17- ஆதரவற்றோர் சித்ரவதை, பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விக்கிர வாண்டி அருகே உள்ள அன்பு ஜோதி காப்பக நிர்வாகி உட்பட 8 பேரை கைது செய்த காவல் துறையினர், அந்த காப்பகத்திற்கு சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே குண்டலப்புலியூ ரில் அன்புஜோதி காப்பகம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதர வற்றோர் தங்க வைக்கப்பட்டுள் ளனர். இந்த காப்பகத்தில் தங்கியி ருந்தவர்களுக்கு சித்ரவதை, பாலியல் தொந்தரவு கொடுக் கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து அரசு அதிகாரி கள், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி காப்பகம் நடை பெற்று வந்ததும், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியதோடு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், காப்ப கத்தில் இருந்த 17 பேர் மாய மாகியிருப்பதும், தெரியவந்தது, இதையடுத்து காப்பகத்தில் தங்கியிருந்த 143 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் உள்ள அரசு காப்பகங்க ளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது தொடர்பாக கெடார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி அவரது மனைவி மரியா ஜூபின், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத் தேரியை சேர்ந்த காப்பக மேலாளரான பிஜூமோகன், காப்பக பணியாளர்களான விழுப்புரம் அயினம்பாளை யத்தை சேர்ந்த பூபாலன், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நாராயணபுரத்தை சேர்ந்த முத்துமாரி, விக்கிர வாண்டி அருகே விநாயக புரத்தை சேர்ந்த கோபிநாத், நரசிங் கனூரை சேர்ந்த அய்யப்பன், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தாஸ், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ் ஆகிய 8 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதி பதி அகிலா அதிகாலை 4 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் காப்பக நிர்வாகி ஜூபின்பேபியிடம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜூபின்பேபியை வருகிற மார்ச் 2 வரைக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து ஜூபின்பேபியை காவல்துறை யினர் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து குண்டல புலியூரிலுள்ள அன்பு ஜோதி காப்பகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.