tamilnadu

img

79,600 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு

சென்னை, மார்ச் 13 - தமிழகம் முழுவதும் நடை பெற்ற தேசிய லோக் அதாலத்தில் (மக்கள் நீதி மன்றம்) 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று (மார்ச் 12) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வு, மதுரைக் கிளையில் நான்கு அமர்வு, மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் அமர்வு என மாநிலம் முழுவதும் என 419 அமர்வுகள் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதில், 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் அடங்கும். இதில், 2004 செக் மோசடி வழக்கு களில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ப்பட்டு, 49 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 381 ரூபாய் சம்பந்த ப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 3 ஆயிரத்து 157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 144 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 246 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 301 சிவில் வழக்கு களில் 33 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 130 ரூபாய் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்ஆணைக்குழு உறுப்பினர்செயலாளர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 குடும்ப நல வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் பிரச்னை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.