tamilnadu

சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 61 பேர் கைது

குண்டூர்,பிப்.17- ஆந்திர மாநிலம் குண்டூரில் கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மருத்துவமனை ஊழியர் உட்பட 61 பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த  தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக் காக  குண்டூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் உயிரிழந்தார்.  பின்னர் சிறுமி மட்டும் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் சுவர்ணகுமாரி என்பவர் உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என்று சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவர் தனது குழந்தையை சுவர்ணகுமாரியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் சிறுமியை அழைத்து சென்ற சுவர்ணகுமாரி விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், ஐதராபாத் போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனால் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்த தப்பித்த சிறுமி குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், குண்டூர் காவல்துறையிடம் தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார்.  குண்டூர் காவல் கண்காணிப்பாளர் ஆரிப் கபீஸ் சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய சுவர்ணகுமாரி உட்பட 21 பேரை அதிரடி யாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடு படுத்திய சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடி யாக கைது செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.