tamilnadu

img

திருவாரூர் வாஞ்சியூர் கிராமத்தில் 60 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன

திருவாரூர் வாஞ்சியூர் கிராமத்தில் 60 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன

மன்னார்குடி, ஜுன் 13-  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் வட்டம் ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாஞ்சியூர் கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கான கூட்டம் மன்னார்குடி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால் தலைமை யில் நடைபெற்றது. வாஞ்சியூர் கிராமத்தில் நீண்ட நாட்களாக 60 குடும்பங்களுக்கான குடிநீர், பொது சுகாதார வளாகம், சாலை வசதி போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளுக்காக தொடர்ந்து  இயக்கங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்தது.  இப்பகுதியில், ஒரு குடும்பத்தில் மட்டும் ஐந்து, ஆறு நபர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான மக்களை  அணிதிரட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம், சக்தியான சாலை மறியல் போராட்டத்தை யும் மன்னார்குடி, திருவாரூர் தேவங்குடி முக்கட்டில் நடத்தியது. இதன் விளைவாக 18 குடும்பங்களுக்கு மட்டும் மாவட்ட வருவாய்த்துறை வாழ்வதற்கு லாயக்கற்ற ஒரு இடத்தைக் காட்டி, பட்டா வழங்கி உள்ளது.  இந்நிலையில், கட்சியின் தொடர்ந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட 60 குடும்பங்கள் அடுத்த கட்ட இயக்கங் களுக்கு கட்சியின் வழிகாட்டுதலோடு இயங்க வேண்டும் என தீர்மானித்து பி. இளங்கோ தலைமையில், கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை வாழ்த்தி வரவேற்ற மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், இக்கிராமத்தில் கட்டுக்கோப்பாக மக்கள் இயங்கினால் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி என்றும் உறுதியாக துணை நிற்கும் என்று உறுதி அளித்து சிறப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரகுபதி, ஏ.பி. தனுஷ்கோடி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பிச்சைக்கண்ணு, நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், சிஐடியு விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி. முத்துக்கிருஷ்ணன், நகரப் பொருளாளர் ஜி. மாரிமுத்து, கட்சி  கிளைச் செயலாளர் கவியரசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.