மதுராந்தம்,ஜூலை 8- மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி யன்று (ஜூலை 8) லாரி மீது அரசுப் பேருந்து மோதிய சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உட் பட 6 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்து ஒன்று 50 பயணி களுடன் சென்னையிலிருந்து சிதம்ப ரம் நோக்கி சென்றுக் கொண்டி ருந்தது. அப்போது, இரும்பு கம்பி களை ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற லாரியின் மீது இடது பக்க மாக அரசுப் பேருந்து அதி பயங்கரமாக மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் பாதி பேருந்து உருக்குலைந்தது. ஓட்டுநர் இருக் கைக்கு இடது புறம் உள்ள இரு இருக்கைகளும், பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் பின்புறம் ஒட்டிக் கொண்டது. இந்த கோர விபத்தில் சென்னை யை சேர்ந்த வெங்கடேசன், மணி கண்டன், குரோஷா, கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா (21) மற்றும் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள், சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனை மற்றும் மது ராந்தகம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இந்த கோர விபத்தி னால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது முதல்வர்-ஆளுநர் இரங்கல் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.