ஊனமுற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், மாதாந்திர உதவித் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 3,800-ம், தெலுங்கானாவில் 3,016-ம் வழங்கப்படுவது போல், தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தார்.