tamilnadu

img

குமரியில் கனமழை : 492 பேர் முகாம்களில் தஞ்சம்

நாகர்கோவில்,, டிச.18- மிக்ஜம் புயல் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களை மழை பதம்பார்த்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை  நீடித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 303.2 மி.மீ மழை பதிவானது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளவை நெருங்கும் நிலை யில் அந்த அணைகளில் இருந்து 4000 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அந்த நீர் வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோரம் வேடிக்கைப் பார்க்கவோ செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள வீடு களில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். மழை காரண மாக நகர்கோவில் பறக்கின்கால், ஊட்டுவாழ்மடம், மீனாட்சி கார்டன், அஞ்சுகிராமம் காவல்நிலையம் உள் ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக் குள் தண்ணீர் புகுந்தது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர் கள் படகுகள் மற்றும் ஜே.சி.பி இயந்தி ரங்கள் மூலம் மீட்டனர். வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள மக்கள் 7 முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாறக்கால் மடம், ஊட்டுவாழ்மடம், மீனாட்சிகார்டன், சக்தி கார்டன் உள் ளிட்ட பகுதிகளில் 61 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பறக்கின்கால், மருங்கூர், பெருமாள்புரம், இரவி புதூர், நல்லூர், தோவாளை அண்ணா நகர், திருப்பதிசாரம் ஆகிய பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததை அடுத்து மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 7 முகாம்களில் 169 குடும் பங்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட் பட்ட பறக்கின்கால், ஊட்டுவாழ்மடம், சக்திகார்டன் ஆகிய பகுதிகள் முன்பு வயல்வெளியாக இருந்தன. பின்னர் அவைகள் பிளாட் போடப்பட்டு குடியி ருப்புகளாக மாறின. அந்த பகுதிகளில் தான் அதிக அளவு தண்ணீர் தேங்கி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 7 முகாம் களில் 194 ஆண்கள், 235 பெண்கள், ஒரு திருநங்கை, 62 குழந்தைகள் உள்பட 492 பேர் தங்க வைக்கப்பட்டுள் ளனர். மாவட்டம் முழுவதும் மழைக் காரணமாக 6 குளங்களின் கரைகள் உடைந்துள்ளன. பல குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. திங்கட் கிழமை மழை சற்று குறைந்ததால் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும் முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மழைகாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை நிலவரப்படி 45.57 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 208 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையில் இருந்து 5 ஆயிரத்து 32 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77  அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.32 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடி க்கு 5 ஆயிரத்து 642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து 587 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப் பட்டால், கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாகக் கன்னி யாகுமரி மற்றும் சின்னமூட்டம் பகுதி களிலிருந்து நாட்டுப் படகுகள் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.