திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் நகர்குழு சார்பில் கொடி யேற்று நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரேம்குமார், நகரத்தலை வர் அஜீத்குமார், நகர்க்குழு உறுப்பினர் தினேஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். வேடசந்தூர் ஒன்றியம் வெள்ளணம்பட்டி, அய்யனார் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட துணைச்செயலாளர் முகேஷ், ஒன்றியச் செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்டப் பொ ருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.