tamilnadu

10ம் வகுப்புத்தேர்வு  மதுரையில் 40,000 பேர் எழுதுகின்றனர்

மதுரை, ஜூன் 4-   தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி தேர் வுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந் துள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாண வர்களுக்கான தேர்வுச்சீட்டுகளை வியா ழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாணவர்களின் தேர்வுச்சீட்டுகள் பதி விறக்கம் செய்யப்பட்டன. மதுரை வரு வாய் மாவட்டத்தில் மதுரை, திருமங்க லம், மேலூர், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்டங்கள் இயங்கி வரு கின்றன. நான்கு கல்வி மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை தேர்வுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் பணி யில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுச்சீட்டு விநியோகம் மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமி நாதன் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 40,124 மாணவ, மாண விகள் மற்றும் 936 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.  138 தேர்வு மையங்களாக இருந்தது  தற்போது 469 தேர்வு மையங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தேர்வுச்சீட்டுகள் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மாண வர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூன் 8,9 தேதிகளில் தேர்வுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.  தேர்வுக்கு மாணவர்கள் வரும்போது வெப்பமானி கொண்டு பரி சோதிக்கப்படும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. தேர்வின்போது பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆலோசித்து போக்குவரத்து கூடுதலாக தேவைப்படும் பகுதிகளில் கூடுதல் அரசுப்பேருந்துகள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.