tamilnadu

img

ம.ரெட்டியபட்டியில் 40 அடி உயர கொடி மரம்

திருச்சுழி, ஜூன் 5- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்கு உட் பட்டது ம.ரெட்டியபட்டி. இம்மண்ணின் மைந்தனாக பிறந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்  குழு உறுப்பினராக உயர்ந்த  தோழர் எம்.என்.எஸ்.வெங் கட்டராமன் நினைவாக, அதே கிராமத்தில் 40 அடி  உயரத்தில் பிரம்மாண்டமான கொடி மரம் அமைக்கப்பட் டது. ம.ரெட்டியபட்டியில் தோழர் எம்.என்.எஸ்.வெங்  கட்டராமன் நினைவுக் கொடி  மரத்தில் செங்கொடியை ஏற் றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செங் கொடியை கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் ஏற்றிவைத்தார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், “ம.ரெட்டிய பட்டி கிராமத்திலிருந்து நான் தான் அவரை விருதுநகருக்கு கட்சிப் பணிக்காக அழைத் துச் சென்றேன். அவரது தனித்த செயல்பாட்டினால் கட்சியில் பிரகாசிக்கத் தொடங்கினார். சிறந்த தலைவராக வளர்ந்  தார். அவருக்கு எப்போதும் கோபம் வராது. யாருடனும்  கோபித்துக் கொள்ளமாட் டார். களப் பணிகளில் சிறந்து விளங்கியவர். திறமை மிகுந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் அனைவரும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய் யும்பட்சத்தில் தோழர் எம்.என்.எஸ் எப்போதும் நம் மோடு வாழ்வார்” என்றார். பின்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டச் செயலாளர் மார்கண் டன் வரவேற்றார். சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ், திருச்சுழி ஒன் றிய பெருந்தலைவர் பொன் னுத்தம்பி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மூத்த தலைவர்கள் எஸ்.ஏ. பெருமாள், எஸ்.பாலசுப்பிர மணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், வி.முருகன் ஆகி யோர் அவரது நினைவைப் போற்றி பேசினர். முடிவில் ரமேஷ்பாபு நன்றி கூறினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.அன்புச்செல்வன், எஸ்.காத்தமுத்து, கே.சம யன் உட்பட பலர் பங்கேற்ற னர்.