tamilnadu

img

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருவள்ளூர், டிச. 5- ஐதராபாத்திலிருந்து  ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இதில் 30 பேர் பயணம் செய்த னர். அந்த பேருந்து திங்களன்று (டிச.5) அதிகாலை 5 மணிக்கு கவரப்பேட்டை அருகே சென்னை  - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆந்திராவிலிருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து ஓட்டுநர் லாரியை முந்திச்செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி யதில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. பேருந்து சின்னா பின்னமாக நொறுங்கியதால் காய மடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்  மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கவரப் பேட்டை காவல் துறையினரும், பொன்னேரி தீயணைப்பு துறை யினரும் பேருந்தின் பாகங்களை வெட்டி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த தொக்கலா சதீஷ்குமார் (45), தும்மலா ரோஷித் (35), ஆந்திராவை சேர்ந்த பேருந்து கிளீனர் ஸ்ரீதர் (35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பயணிகள் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். அங்கு சிகிச்சை பலனின்றி கும்மிடிப்பூண்டி புதுவாயல் பகுதியை சேர்ந்த மகி என்பவர் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.  இதுகுறித்து கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து, பெங்களூருவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கிஷோரை கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.