சென்னை,ஜன.3- தமிழ்நாடு முழுவதும் வருகிற 30 நாட்களி 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை சைதாப் பேட்டையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில்,“ தமிழகத்தை பொறுத்த வரை 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே போடப்படும்” என்றார். சிறுவர்களுக்கு தனியாக முகாம் நடத்தியும் ஊசி போடப்படும். பெரியவர்க ளுக்கான முகாம்களுடன் இணைந்து நடத்தினால் தனி வரிசை ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு அந்த அந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்படும். இதற்காக ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் அனைவருக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரி வித்தார். சிறுவர்கள் விரைந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மாதத்துக் குள் அனைவருக்கும் போட்டு முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு ள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. மருத்துவமனைகளில் சேர்ந்து 3 நாட்களில் ‘நெகட்டிவ்’ வந்து விடுகி றது. இருப்பினும் 5 நாட்கள் தங்கவைத்து கண்காணிக் கப்படுவார்கள். அதன் பிறகும் சோதனை நடத்தி ‘நெகட்டிவ்’ வந்தால் உடன டியாக வீடுகளுக்கு அனுப்பப் படுவார்கள் என்றும் அமைச் சர் கூறினார்.