tamilnadu

img

புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்கள் சர்வதேச குறும்பட ஆவணப்பட விழா

புதுச்சேரி,ஆக. 3- புதுச்சேரியில் நடை பெறும் 11 ஆவது  சர்வதேச  குறும்பட ஆவணப்பட விழாவில் 32 படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மும்பை மத்திய  திரைப்படப் பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து 11 ஆவது  சர்வதேச குறும்பட ஆவணப்பட விழா வெள்ளிக்கிழமை (ஆக.4) துவங்குகிறது. இந்த விழா வருகிற 6 ஆம் தேதி  வரை 3 நாட்கள் புதுச்சேரி யில் நடைபெறுகிறது. இவ்விழாவில் 9 நாடு களைச் சேர்ந்த 32 படங்கள் திரையிடப்படுகின்றன. கான் திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா ஆகிய வற்றில் விருது பெற்ற சர்வ தேச அளவில் சிறந்த படங் கள் திரையிடப்படுகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி யைச் சேர்ந்த 11 தமிழ் படங்க ளும், இளம் படைப்பாளி களின் இலக்கிய படங்கள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு படத்தின் முடி வில் திரை விமர்சனம்  குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியி லிருந்து 120 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த விழா,  புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங் கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தேசிய திரைப்பட வளர்ச்சிக்  கழக பொது மேலாளர் ராம கிருஷ்ணன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லோரன் ஜலிகு, எடிட்டர் லெனின், இயக்குநர் சிவ குமார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் இளங்கோ, திரைக் கலைஞர் ரோகிணி  உள்ளிட்டோர் பங்கேற் கிறார்கள். இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் கோ.இரா.ரவிச்சந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லோரன் ஜலிகு, தமுஎகச மாநில நிர்வாகி கள் ராமச்சந்திரன், தமிழ் மணி,புதுச்சேரி நிர்வாகி கள் உமா, கலியமூர்த்தி, செல்வம் ஆகியோர் வியா ழனன்று (ஆக.3) புதுச்சேரி யில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆவணப்பட விழாவில் திரை யிடப்படும் திரைப்படங்கள் குறித்து சிறிய புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லோரன் ஜலிகு வெளியிட்டார்.