tamilnadu

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க 28 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க 28 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

சென்னை, ஆக.29 -  அனைவருக்கும் ஐ.ஐ.டி. திட்டத்தின்கீழ் சென்னை ஐ.ஐ.டி.யில் ‘பி.எஸ். டேட்டா சயின்ஸ்’ படிப்பில் சேர 28 மாணவ-மாணவி யர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பணி செய் வோருக்கும் ஐ.ஐ.டி. வாயிலாக தொழில்நுட்ப  கல்வியை பரவலாக்கும் வகையில் இணைய  வழியில் பல்வேறு படிப்புகளை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த  சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர் களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தரவு  அறிவியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வான மாணவர்களின் விவரம்  சென்னை மாவட்டத்திலிருந்து 6 மாண வர்கள், கோவை மாவட்டத்திலிருந்து 8 மாண வர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 3 மாணவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தி லிருந்து 1 மாணவர், சேலம் மற்றும் விழுப்புரம்  மாவட்டங்களில் இருந்து தலா 2 மாண வர்கள், சிவகங்கை மற்றும் வேலூர் மாவட்டங் களில் இருந்து தலா 3 மாணவர்கள் என மொத்தம் 28 பேர் தேர்வாகியுள்ளனர். இவர் களில் சிலர் தற்போது பிளஸ் 2 படித்து வருவ தால் அடுத்த ஆண்டு இந்த படிப்பில் சேர லாம். தேர்வான மாணவர்கள் தெரிவிக்கை யில், “எங்கள் பெற்றோரின் ஆண்டு வருவாய்  ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவு என்பதால் இந்த படிப்புக்கான கட்டணத்தில் 75 சத வீதத்தை சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமே செலுத்தும். மீதித் தொகையை அரசு செலுத் தும். இதை படித்து முடித்ததும் பெரு நிறுவ னங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வாய்ப்பு பள்ளிக் கல்வித் துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி.  நேரடியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தால் கிடைத்தது. இதேபோல் மேலும் பல்வேறு வாய்ப்புகளை வழங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் தெரி விக்கையில், “இத்திட்டத்தில் அரசுப் பள்ளி  மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு  இல்லாமல் இளநிலை அறிவியல் பட்டப்படிப் பில் சேரலாம். கல்லூரி மாணவர்களும் இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த தகவல்களை https://study.iitm. ac.in/ மற்றும் https://study.iitm.ac.in/es  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.