tamilnadu

img

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266ஆவது பிறந்த நாள் விழா

 சென்னை, ஏப். 17- சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்க ணக்கானோர் கிரிவலம் சென்ற நிலையில், அவர்கள் சொந்த ஊர் திரும்ப போதிய பேருந்துகள், ரயில்கள் கிடைக்கா மல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. எனவே, கடந்த சனிக்கிழமை அதி காலை 2 மணி 23 நிமிடத்திற்கு மணிக்கு தொடங்கி இரவு 12 மணி 33 நிமிடம் வரை கிரிவல நேரமாக அறிவிக்கப் பட்டது. அந்த நேரத்தில் மலையை சுற்றி 14 கிலொ மீட்டர் தூரத்திற்கு லட்சக்கண க்்கான மக்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பின்னர் சொந்த ஊர் திரும்ப ஏராள மானோர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால், சிறப்பு ரயில்கள் இயக்கப்ப டாததால் ஒரே ரயிலில் ஆயிரக்க ணக்கானோர் முண்டியடித்து ஏறிச் சென்றனர். ரயிலில் ஏற இடம் கிடைக்கா தவர்கள் பல மணி நேரம் ரயில் நிலை யத்தில் காத்திருக்கும் சூழல் உருவானது. மற்றொரு புறம் சொந்த வாகனங்கள், அரசுப் பேருந்துகள் கோவிலுக்கு பல கிலோ மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. கிரிவலம் முடிந்து வந்த வர்கள் தற்காலிக பேருந்து நிலை யங்கள், வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல முறையாக பேருந்துகள் இயக்கப்பட வில்லை. ஆட்டோக்களிலும் அடாவடி யாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டதால் ஏராளமானோர் சிரமத்திற்கு ஆளாகினர்.