சென்னை, டிச.16- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத் தில் உள்ள சிப்காட் பனப் பாக்கம் தொழில் பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் ரூ.1,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகை யில் அமைக்கவுள்ள காலணி கள் உற்பத்தி தொழிற் சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயி லாக அடிக்கல் நாட்டினார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொரு ளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித் துள்ளார். அந்த இலக்கினை எய்துவதற்கு பல்வேறு முன் னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரு கிறது. அதன் ஒரு பகுதி யாக, தமிழ்நாட்டின் இளை ஞர்களுக்கு அதிக எண்ணிக் கையிலான வேலைவாய்ப்பு களை உருவாக்கும் நோக்கத் துடன், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்து வதற்காகவும் முதல்வர் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற் கொண்டு, தொழில் நிறு வனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டது
குறிப்பிடத்தக்கது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு இண்டஸ்ட்ரியல் குழுமம் இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இக்குழு மம் விளையாட்டு காலணிகள் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலக அளவில் இரண்டா வது பெரிய காலணி உற்பத்தி யாளராக திகழ்ந்து வரு கிறது. இக்குழுமம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு கால ணிகள் மேம்பாடு, வடி வமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது. மாநிலத்தில் அனை வரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹோங்ஃபு நிறுவனத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தின் அலு வலர்கள் உடனிருந்தனர்.