tamilnadu

img

மிசோரம்: ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து 22 பேர் பலி

பாஜக கூட்டணி ஆளும் வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான மிசோரமில் தலைநகர் ஐஸ்வாலுக்கு  அருகில் சாய்ரங் பகுதியில் உள்ளது குருங் ஆறு.  பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங் களை இணைக்க குருங் ஆற்றில் கட்டப் பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் புதனன்று காலை 11 மணிக்கு இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.