சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 12 நக்சலைட்டுகள் பதுங்கி இருப்ப தாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சென்றனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.