18-வது ஜி-20 உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் 2 நாட்களாக நடைபெற்றது. ஜி-20 உச்சி மாநாட்டின் சிறப்பு ஏற்பாடு என்ற பெயரில் ரூ. 2,700 கோடி செலவில் பாரத் மண்டபம் அமைக்கப்பட்டது. மாநாட்டின் துவக்க நாளான சனிக்கிழமையன்று தில்லி பகுதியில் பெய்த சிறிய மழைக்கே “பாரத் மண்டபம்” தாங்கவில்லை. மழைநீர் தேங்கியதால் “தற்காலிக குளம்” போல “பாரத் மண்டபம்” காட்சியளித்தது. இதனால் மாநாட்டிற்கு வந்தவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.