tamilnadu

img

18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூர், ஏப். 15- திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. திருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே செல்வராஜ் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். மாநகர மேயர் ந. தினேஷ் குமார் முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார். துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் உள்பட திருப்பூ ரின் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் வழக்கறி ஞர் பி. மோகன் தலைமை ஏற்றார். பாரதி புத்தகாலயம் மேலாளர் ஆர்.நாக ராஜன் வரவேற்றுப் பேசினார்.  மேலும், வழக்கத்தை விட உற்சாகமாக முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டனர். மொத்தம் 95 அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன.