சிந்தனை சிற்பி சிங்காரவேலனாரின் 165 வது பிறந்த தினத்தையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.