சென்னை, டிச. 3- வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கைவிடக் கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் வரும் 16, 17 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 157 லட்சம் கோடி பொதுமக்கள் சேமிப்பு உள்ள வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க ஒன்றிய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது. இதனைக் கண்டித்து வரும் 16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர் கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வங்கிகள் லாபத்தில் இயங்கி வரும் சூழலில் பெருமுதலாளிகளின் வங்கிக் கடனை வசூலிப்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. எனவே வரும் 16, 17 ஆம் தேதிகளில் நடை பெறும் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு தமிழக முதலமைச் சரிடம் கோரிக்கை வைத் ்தோம். முதல்வரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.