மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பர் 26,27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற்றது. இம்முகாமில், தீக்கதிர் நாளிதழுக்கு திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் 150 ஆண்டு சந்தாவுக்கான தொகை மற்றும் தினசரி தீக்கதிர் நாளிதழ் 50 என மெத்தம் 200 நாளிதழுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வழங்கினார். நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகை மாலி எம்எல்ஏ., ஐ.வி.நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.