tamilnadu

img

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 15 நாளில் கடன்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை,மார்ச் 28- தமிழ்நாடு சட்டப்பேர வையில் செவ்வாயன்று (மார்ச் 28) கேள்வி நேரத்தில்,  மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு வழங்கப்படும் கடனுதவியை விரைந்து வழங்க அரசு ஆவன செய்யுமா? என்று பென்ன கரம் தொகுதி பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின், தனது முதல் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது,  மகளிர் சுய உதவிக்குழுக் கள் நேரடி வங்கி கடன்பெற  குறைந்தபட்சம் மாதம் ஒரு  முறை 6 மாதம் குழு கூட்டத்தை தவறாமல் நடத்தியிருக்க வேண்டும். சேமிப்பு தொகை உள் கடன் வழங்கி குறித்த காலத்திற்குள் திரும்ப செலுத்தியிருக்க வேண்டும்.  கணக்கு புத்தகங்களை முறையாக பராமரித்து செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் குழுக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயம் செய்து கடன் கொடுக்க விண்ணப் பங்கள் பெறப்படுகிறது.  

அப்படிபெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்து  ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில்  கடன் அனுமதி வழங்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து, 21 நாளில் நேரடியாக வங்கிக் கணக் கில் கடன்தொகை செலுத்தி விடுகிறோம். 21 நாட்களுக்குபிறகு நிலுவையிலுள்ள விண்ணப் பங்கள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வங்கியாளர்கள் கூட்டங்களில் ஆய்வு செய்து  விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2022-23 ஆம் ஆண்டின்  நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு  ரூ.25 ஆயிரம் கோடி  வங்கிக் கடன் இணைப்பாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதை விட அதிகமாக கடன் வழங் கப்பட்டது. இதன் மூலம் சுமார் 4 லட்சத்திற்கும் அதிக மான குழுக்கள் பயன டைந்தன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வங்கிக்கடன் இணைப்பாக ரூ.30 ஆயிரம்  கோடி வழங்க தீர்மானித் திருக்கிறோம். இந்த முறை யும் இந்த இலக்கை தாண்டி  கடன் வழங்குவோம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த தொகையை கடனாக பார்க்கவில்லை. அவர்களது  உழைப்பின் நம்பிக்கையாக பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.