திருநெல்வேலி, ஜூன் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தை தாக்கிய 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். பெண் வீட்டாரின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர். வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி அமைப்புச்செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் வந்த பெண் ணின் உறவினர்கள் 30- க்கும் மேற்பட்ட வர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவ லகத்தை சூறையாடினர். இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார். இதில் பெண்ணின் தந்தை முருக வேல்(55), பெண்ணின் அண்ணன் சரவணக் குமார்(27), தாய்மாமாவான புதுப்பேட்டை யை சேர்ந்த சங்கர் (35), உறவினர்கள் குரு கணேஷ்(27), மதுரை யோகீஸ்வரன்(23), பெண்ணின் தாய் சரஸ்வதி(49), மார்த்தாண் டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா (75), புதுப்பேட்டையை சேர்ந்த பெரியம்மா அருணாதேவி(51), மதுரை பெரியம்மா வேணி (52), அக்காள்கள் ஸ்டெல்லா(29), சூர்யா(32) ஆகிய 12 பேரை கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதலில் தொடர்பு டைய பந்தல் ராஜாவும் கைது செய்யப் பட்டார். இதில் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யாகைக் குழந்தையுடன் இருப்ப தன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. 5 பெண்கள் உட்பட 11 பேர் நெல்லை ஜே எம் -1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களில் 5 பெண்கள் ஜாமீனில் விடு விக்கப்பட்டனர். ஆறு ஆண்களை பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.