tamilnadu

img

தீவிர நோயால் பாதிக்கப்படும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.12 ஆயிரம்: அமைச்சர்

சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு கட்டுமானத்  தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற 60  வயதுக்குட்பட்ட தொழி லாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாது காக்கும் வகையில், தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம்  முதற்கட்டமாக மூன்றாண் டுகளுக்கு அறிமுகப்படுத் தப்படும் என்று அமைச்சர்  சி.வி.கணேசன் தெரிவித் தார். சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீது புதனன்று  (மார்ச் 29)  விவாதம் நடைபெற்றது. பிறகு பதில் அளித்து பேசிய  துறையின் அமைச்சர் சி.வி. கணேசன் புதிய அறிவிப்பு களை வெளியிட்டார். அதன் சுருக்கம் வருமாறு:-

அமைப்புசாரா தொழி லாளர்கள் நல வாரியங்க ளில் பதிவு பெற்ற தொழி லாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மூக்குக்  கண்ணாடி உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதேபோல், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ரூ.2500, பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரூ.50,000 உதவித் தொகை வழங் கப்படும். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர்கள் நல வாரியத்தில்  பதிவு பெற்ற தொழிலாளர்க ளின் விபத்து மற்றும் மரண மடையும் நேரத்தில், தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்  தொகை 1.25 லட்சம் ரூபாயி லிருந்து 2 லட்சமாக உயர்த்தி  வழங்கப்படும். புலம்பெயர்ந்த கட்டு மானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணி யிடத்தில் விபத்தில் உயிர்  இழக்க நேரிட்டால் உடலை  சொந்த ஊருக்கு எடுத்து வாரியத்திலிருந்து நிதி யுதவி வழங்கப்படும். சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் மயக்க  மருந்தியல், காது, மூக்கு,  தொண்டை, மருத்துவம் மற்றும் குழந்தை மருத்து வம் ஆகிய பிரிவுகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு பிறகான இரண்டு ஆண்டு பட்டயப்படிப்புகள் துவக்கப் படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.