tamilnadu

img

சென்னை புனித ஜான் மேல்நிலை பள்ளியில்  11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்

சென்னை புனித ஜான் மேல்நிலை பள்ளியில்  11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் துருவா தலைமையிலான குழு, போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் விபத்தினை தானியங்கி ரோபோட் மூலம் தடுப்பதற்கான கருவியினை  கண்டுபிடித்தது. இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில், இக்கருவி மும்பை ஐஐடியில் 2-ஆவது இடம் பெற்று பரிசு வென்றது. மாணவர் துருவா, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான இளங்கோ - கல்பனா தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.