tamilnadu

img

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு

சென்னை,செப்.14- தமிழ்நாடு, புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல் 13  நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 204 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரே வாரத்தில் 113 பேர் டெங்கு நோயாளிகளாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப் பட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரி வித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தை கள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதனன்று 5 பேருக்கு டெங்கு  பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் 2 வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.