tamilnadu

img

ஒகேனக்கல் காவிரியில் 11 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

தருமபுரி,செப்.2- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, காவிரி ஆறு அமைந் துள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற் றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.