tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் என்.வரதராஜன் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

திண்டுக்கல், ஏப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளரு மான தோழர் என்.வரதராஜன் அவர்களின் 10 ஆம் நினைவேந்தல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே கம்பிளியம் பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏப்ரல் 10 ஞாயிறன்று நடைபெற்றது.தலைவர்கள் மற்றும் தோழர்கள் நினைவிடத்தில் மாலை செலுத்தி மரியாதை செய்தனர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்  கே.பாலபாரதி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், சமூகத்தின் அடி ஆழத்தில் இருக்கக்கூடிய அருந்ததிய மக்களைப் பற்றி அவர்களுடைய வறுமையைப் பற்றி பேசியவராக தோழர் என்.வரதராஜன் மட்டுமே இருந்தார். அதனால் தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைருடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை சட்டமாக்கி பெற்றுத்தந்தார்.

தமிழகத்தில் அருந்ததியர்களுக்கான முதல் குரலாக ஒலித்தவர் தோழர் என்.வரதராஜன் அவர்களே. அவரது முயற்சியின் காரணமாக இன்றைக்கு அந்த மக்களின் வாழ்க்கை ஓர ளவு மேம்பட்டு வருகிறது. அவர் விட்டுச் சென்ற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரி வித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச்செயலாளர் ஏ. ராஜரத்தினம் தலைமை வகித்தார். சஞ்சீவி முன்னிலை வகித்தார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வ.கல்யாணசுந்தரம், தேனி மாவட் டத்தலைவர்கள் ராமச்சந்திரன், வெண்மணி, எல்.ஐ.சி. தென் மண்டல தலைவர் வாஞ்சி நாதன் உள்ளிட்டோர் பேசினர். தோழர் என்.வரத ராஜன் குடும்பத்தினர் வனிதா, ராகுல்ராஜன், பாரதி, ஆசிரியை சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வி.முத்துச்சாமி நன்றி கூறினார்.  திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆசாத், அழகுராஜா, ஆர்.வனஜா, மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.             (ந.நி.)