tamilnadu

img

சிஏஏ, தொழிலாளர் விரோதச் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20 - மக்களவைத் தேர்தலுக்கான திமுக-வின் 64 பக்க வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதனன்று வெளியிட்டார். அதில், சிஏஏ, ஒரே நாடு, ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை ஆகியவை ரத்து செய்யப்படும், மகளிர்க்கு உடனடியாக 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும், 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்பட்டு, கூலியும் ரூ. 400 ஆக உயர்த்தப்படும், நெடுஞ்சா லைச் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், எரிவாயு விலை யில் ரூ. 500, பெட்ரோல் விலை  ரூ.75, டீசல் விலையில் ரூ.65 குறைக்கப்படும்  என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலா ளர் கனிமொழி கருணாநிதி தலைமை யில் குழு அமைக்கப்பட்டது. இதில், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,  டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், கே. ஆர்.என். ராஜேஷ்குமார், எம்.எம். அப்துல்லா, சி.வி.எம்.பி. எழிலர சன், எழிலன், மேயர் பிரியா ஆகி யோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் பிப்ரவரி 5 முதல்  தமிழ்நாட்டின் முக்கிய நக ரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பின ரின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொலைபேசி வாயிலாக வும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக் கைகள் பெற்றனர். அதன் பிறகு, அறிக்கையை தயார் செய்தனர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதனன்று (மார்ச் 20) திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 64 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையை குழு வின் தலைவர் கனிமொழி, முத லமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். பிறகு, அதை முத லமைச்சர் வெளியிட்டார்.  துரை முருகன், டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, க. பொன்முடி, எ.வ. வேலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மக்களின் தேர்தல் அறிக்கை: முதல்வர் பெருமிதம்

பின்னர் பேசிய முதலமைச்சர், “தேர்தலுக்கு முன்பாக ஒரு  அறிக்கை தயாரித்து - பொறுப்பு க்கு வந்த பின் அதை முழுமை யாக நிறைவேற்றிக் காட்டுவதில் முதன்மை இயக்கமாக திமுக எப்போதும் இருந்துள்ளது” என்றார். இந்த அறிக்கை என்பது திமுக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல - தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டை பாழ்படுத்திய பாஜக

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக ஆட்சியானது இந்தியாவை அனைத்து வகை யிலும் மிக மோசமான வகையில் பாழ்படுத்தி விட்டது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்ல, இந்தியாவில் இருந்த கட்டமைப்புகளையும் சிறுகச் சிறுகச் சிதைத்து விட்டார்கள். இன்னும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும் என்ற அரசியல் எண்ணத்துடன் இந்தியா கூட்டணி அகில இந்தியா முழுமைக்கும் அமைந்துள்ளது. நடைபெற இருக்கும்  மக்களவைத் தேர்தல் மூலம் அமைய இருக்கும் புதிய ஆட்சியானது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை மதிக்கும் ஆட்சியாக அமையும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

ஆட்சி மாற்றம் உறுதி!

மாநிலங்களை அரவணைத்துச் செயல்படும் ஆட்சியாக அமையும். சமத்துவ - சமதர்ம எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும். அனைவரும் ஒன்று என எண்ணும் சகோதரத்துவ ஆட்சியாக அமை யும். மொத்தத்தில் இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தைக் காத்து - மக்களாட்சி மாண்பைச் செம்மைப் படுத்தும் ஆட்சியாக அமையும். அப்படி அமையக் கூடிய புதிய அரசின் மூலமாக எத்தகைய திட்டங் களை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்து தருவோம் என்பதை இந்தத் தேர்தல் அறிக்கையில் விளக்கி உள்ளதாகவும் முதலமைச்சர் தெரி வித்தார்.      (மேலும் விபரம் 3)