tamilnadu

img

தனியார் நிலங்களில் 100 நாள் தொழிலாளர் பணி ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்... ஏ.லாசர் பேட்டி

மதுரை:
தனியார் நிலங்களில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்துவது ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் விபரீதமான முடிவாக அமையுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறியுள்ளார்.

மதுரையில் திங்களன்று சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தில்பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்தாண்டு இறுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கும் பட்டா இல்லாதவர்களுக்கும் மனையும், மனைப்பட்டாவும் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது, இதன் காலம் 2020-ஆகஸ்ட் என நிர்ணயம் செய்யப்பட்டது, அரசாணையின் படி மனைப்பட்டா கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மனை பட்டா கேட்டு மனுக்கொடு த்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் வழங்கப்படுமெனவும் அரசு தெரிவித்தது. தற்போது அதற்கான காலம் முடிந்துவிட்டது. மாநில அரசு அரசாரணை என் 318-ஐ கால நீட்டிப்புசெய்து அனைவருக்கும் பட்டா வழங்கவேண்டும்.கடந்த சில ஆண்டுகளாக நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்களை விவசாயப் பணிகளுக்கு வரப்பு மடித்தல் உள்ளிட்டவற்றிற்காக தொழிலாளர்களை பயன்படுத்தி வேலை செய்ததாகக் கூறி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் சுமார் ரூ.4,000 கோடி ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என அரசின் சமூக தணிக்கை விபரங்கள் கூறுகின்றன.தலித் மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களின் செயல்பாட்டை தமிழக அரசு, உத்தரவாதப் படுத்த வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் பொருட்களை வழங்குவதற் கான நடைமுறைகளை அரசு அவ்வப்போது மாற்றி அலைக்கழித்து வருகிறது. இதனை கைவிட்டு எளிமையான முறைகளை உருவாக்க வேண்டும்.பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஏறி உயிரிழந்த பயனாளி ஜெயலெட்சுமி குடும்பத்திற்கு நீதி வழங்கவேண்டுமென்றார். இவ்வாறு அவர் கூறினார்.மாநிலக் குழு கூட்டத்தில் மாநிலப்பொதுச் செயலாளர் வீ.அமர்த லிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநில நிர்வாகிகள் பி.வசந்தாமணி, ஏ.வி.அண்ணாமலை, மலைவிளைபாசி, மதுரை மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், து.இராமமூர்த்தி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.