சென்னை,பிப்.9- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. 12,838 பதவியிடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள 12 வார்டுகளுக்கு தேர்தல் நடை பெறவில்லை இதனால் மொத்த பதவியிடங்கள் எண்ணிக்கை 12,826 ஆக குறைந்தது. அதேபோன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத தால் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள 12,825 பதவியிடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இந்த பதவியிடங்க ளுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4 பேர் மாநகராட்சி கவுன்சிலர்கள், 18 பேர் நகராட்சி கவுன்சிலர்கள், 196 பேர் பேரூராட்சி கவுன்சிலர்களாகும். தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டதால், மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளில் நோய் பரவல் ஏற்படாமல் தடுப்பதற் கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக மாவட்ட இணை சுகாதார இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வெப்பமானி, 500 மி.லி. கிருமி நாசனி 6 எண்ணிக்கை, முகத்தை முழுமையாக மூடும் கவசம் 12, முகக்கவசம், கிருமி நாசினி சிறிய பாட்டில்கள், கையுறைகள், முழுகவச உடை, பாலித்தின் பைகள் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய பெட்டகம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் மூலம் அனுப்பப்பட உள்ளது. வாக்குப்பதிவு மையங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப் படுத்த வேண்டும், வெளியில் கிருமிநாசனி மற்றும்கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.