tamilnadu

img

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றம்!

அதிமுக, பாஜக வெளிநடப்பு

சென்னை, நவ. 18 - ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோ தாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதலமைச்சரின் தனித் தீர்மானம் தமிழ் நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. தனித் தீர்மானம் மீதான வாக்கெ டுப்புக்கு முன்னதாகவே பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், ஆளும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ‘குரல் வாக்கெடுப்பு மூலம்  தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய தாக’ சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். காலை 10 மணிக்கு, அவை கூடியதும்,  “15-ஆவது சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட 2 மசோதாக்கள், 16-ஆவது சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட 8 மசோதாக்கள் என ஆளுநர் திருப்பி  அனுப்பிய 10 மசோதாக்களையும் தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவை விதி எண்:143-இன்  கீழ் இப்பேரவை மறுஆய்வு செய்திட இம்  மாமன்றம் தீர்மானிக்கிறது” என்று குறிப்பி டும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த 10 மசோதாக்களையும் உறுப்பினர்கள் அப்படியே நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

முதல்வரின் உரையைத் தொடர்ந்து, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பி னர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அனு மதியளித்தார். அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் இந்த  10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்க வில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான்  கருதுகிறேன். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்  போது, எதற்காக அவசர அவசரமாக சட்டப்பேரவைக் கூட்டம் வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, ’ஆளுநரோ, குடியரசுத்தலைவரோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைக்கும் போது, ‘Rejection’ - நிராகரிக்கிறோம் என்று சொல்வதில்லை.  ‘With Held’ - நிறுத்தி வைக்கிறோம் என்று  சொல்வதே வழக்கம். அவ்வாறு சொல்வது  நிராகரிப்பதாகவே பொருள் என்பதை உச்ச  நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தியிருக் கின்றனர்” என கூறினார்.

அதேபோல, “பல மாதங்களாக கோப்பு களை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபிறகு தான் திருப்பி அனுப்பி உள்ளார்; ஏனென்  றால், வழக்கு விசாரணையின்போது மசோ தாக்களை திருப்பி அனுப்பிவிட்டேன் என்று சொல்வதற்காகவே ஆளுநர் இதைச்  செய்துள்ளார். தற்போது உடனடியாக சிறப்புக் கூட்டம் நடத்தி மசோதாக்கள் மீண்  டும் நிறைவேற்றப்படுவதால் நாளை மசோதா அவரிடம் இருக்கும். மசோதா வுக்கு அவர் கட்டாயம் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆக இப்போது ஆளுநர்  வலையில் மாட்டிவிட்டார். அதற்கு கையெ ழுத்து போட்டுவிட்டு தான் அவர் தில்லிக்கு  போக வேண்டும். இதற்காகவே சட்டப்  பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள் ளது” என்று அமைச்சரும், அவை முன்ன வருமான துரைமுருகன் பதிலளித்தார். பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயி னார் நாகேந்திரன் பேசுகையில், ‘’1998-ஆம்  ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் களை ஆளுநர்களே நியமனம் செய்யலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்’’ என குறிப்பிட்டார். உடனடியாக குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், “அப்போது இருந்த  ஆளுநர்கள் துணை வேந்தர் நியமனத்தில்  தன்னிச்சையாக முடிவு எடுத்ததில்லை. ஆனால் தற்போது இருக்கக் கூடிய ஆளு நர் தன்னிச்சையாக செயல்படுவதுதான் பிரச்சனை’’ என பதிலளித்தார்.  இதனிடையே இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, அதிமுகவினரும், பாஜக-வினரும் அவை யிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைய டுத்து நடந்த வாக்கெடுப்பில், 10 மசோதாக்  களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.  இதனிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் சனிக்கிழமையன்று மாலையே ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தோழர் சங்கரய்யாவுக்கு இரங்கல்

‘பொதுவுடைமைப் போராளி’ என தீர்மானத்தில் புகழாரம்

சென்னை, நவ.18- தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், தோழர் சங்க ரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சபா நாயகர் அப்பாவு இந்த தீர்மானத்தை வாசித்தார்.  “பொதுவுடமை போராளியும் விடுதலைப் போராட்ட வீரரும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யா 15.11.2023 அன்று  தமது 102 வயதில் மறைவுற்ற செய்தி  அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணா துயரமும் கொள்கிறது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, இந்திய  நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், தமது மண்ணிற்  காகவும் தமது வாழ்க்கையை அர்ப்ப ணித்தவர் என். சங்கரய்யா. இந்திய விடுதலைக்கு முன்பே தேசியம் சார்ந்த செயல்பாடுகளில் பல முறை சிறைக்கு சென்றவர். 1967  முதல் 71 ஆம் ஆண்டு வரைக்கும் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகு தியில் இருந்தும், 1977-80 மற்றும் 190-84 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மிக சிறப்பாக பணியாற்றினார். அவரது மகத்தான சேவையை பாராட்டி 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவ ருக்கு ‘தலைசால் தமிழர்’ விருது வழங்கி கவுரவித்தது. அன்னாரது மறைவால் அவரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தி னர் மற்றும் கட்சித் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்  பேரவை தனது ஆழ்ந்த இரங்கலை யும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து முத லமைச்சர், அமைச்சர்கள், பேர வைத் தலைவர் உள்ளிட்ட அனை வரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.