tamilnadu

img

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1.429 கோடி

“சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிரந்தரமாக ஏற்று, அவற்றுக்குரிய சான்றிதழ்களை வழங்குவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவு,  சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு முறை யான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டுத் தலங்களில் புனரமைப் புப் பணிகளை மேற்கொள்வதிலும் உள்ள இடர்பாடுகளைக் களைந்திட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பள்ளிவாசல்களையும், தர்காக் களையும் பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் இந்த ஆண்டு பத்து கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். குமரி மாவட்டம் தக்கலை, வேலூர், தென்காசி மாவட்டத்தில் பொட்டல்புதூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள தர்காக் கள் இந்த ஆண்டு சீரமைக்கப்படும். தேவாலய சீரமைப்பு  அதேபோல தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், சீரமைப்ப தற்கும் இந்த ஆண்டு ரூ.10 கோடி  மானியம் வழங்கப்படும். சென்னை யில் சூளை, கடலூர் மாவட்டத் தில் விருத்தாச்சலம், சிவகங்கை  மாவட்டத்தில் இடைக்காட்டூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள  தேவாலயங்கள் பழமை மாறா மல் புதுப்பிக்கப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில்  ஜவுளி பூங்காக்கள் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஜவுளிப் பொருட்களின் தரத்தை உயர்த்திடவும், தேவை யான சந்தை வாய்ப்புகள் உருவாக் கிடவும் கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.  ரூ.25  கோடியில் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை துறைக் கென ஒரு சிறப்பு ஆராய்ச்சி மற்றும்  தொழில் மேம்பாட்டு நிதியை உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.500 கோடியில் நூற்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். கோவை யில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும்.