tamilnadu

பி.டில்லிபாபுவிற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை, மார்ச் 23 - சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி பாபுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச் சாலை பசுமைச் சாலை அமைக்கப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப் பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யான போராட்டங்களை நடத்தியது. அதன் ஒருபகுதியாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம்  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, கட்சியினருடன் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த செங்கம் மாவட்ட காவல்துறை  கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர் டில்லிபாபுவை தாக்கினர். மேலும், ஆபாசமாக பேசி, சட்டையை பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி  புதுபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சட்டவிரோதமாக சிறை வைத்தனர். இது தொடர்பாக பி.டில்லிபாபு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார்  மனு தாக்கல் செய்தார். அதில், காவல்துறை யினரின் அராஜகங்களை பட்டியலிட்டி ருந்தார். சட்டவிரோத காவல் வைத்த செயல்  மனித உரிமையை மீறில் என குற்றம் சாட்டி யிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித  உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்தி ரன், 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி.டில்லிபாபுவை காவல்துறையி னர் நடத்திய விதம் குறித்து அதிருப்தி  தெரிவித்தார். ஆவண ஆதாரங்களில் இருந்து  மனித உரிமை மீறல் நிரூபணமாகியுள்ளதாக கூறி, டில்லிபாபுவிற்கு தமிழக அரசு ஒரு  லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தர விட்டார். இந்த தொகைiயை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தியிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயையும், உதவி ஆய்வாளர்க ளிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயை யும் வசூலிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.