ஜெனீவா, பிப்.2- மியான்மரில் ராணுவக் கலகம் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மியான் மர் மக்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடுமையான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஓராண்டாக மக்கள் போராடி வரும் நிலையில் குறைந்தது 11 ஆயிரத்து 787 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும் சட்டவிரோத மாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகள் செய்தித் தொடர் பாளர் ரவீனா ஷாம்தாசனிகூறியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மியான்மர் நிலைமை குறித்து செய்தி யாளர்களுக்கு விளக்கிக் கொண்டி ருக்கும்போது ரவீனா இவ்வாறு தெரி வித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இதுவரையில் 1,500 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இவர்களின் மர ணங்களை நாங்கள் ஆவணப்படுத்தி யிருக்கிறோம். இந்தப் புள்ளிவிபரம் போராட்டம் தொடர்பானது மட்டுமே யாகும். இவர்களில் ராணுவத்தின் பிடியில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட 200 பேரும் அடங்குவர்” என்று குறிப்பிட்டார். சித்ரவதை செய்து கொல்லப் பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடை க்கப்பட்டுள்ளவர்கள் அனைவருமே ராணுவத்துக்கு எதிராகத் தங்கள் எதி ர்ப்பைப் பதிவு செய்தவர்களாவர். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட வர்களும், சமூக வலைத்தளங்கள் மூலமாகப் போராடியவர்களும் இதில் அடங்குவார்கள். “ராணுவத்திற்கும், சில பழங்குடி யினப் பிரிவினருக்கும் இடையில் ஆயுத மோதல் நடைபெற்று வருகிறது. அந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட வர்களை இந்த எண்ணிக்கையில் நாங்கள் சேர்க்கவில்லை. இந்த ஆயுத மோதல்களிலும் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டி ருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது” என்று ரவீனா ஷாம்தாசனி கூறியுள்ளார்.