சென்னை, ஜன. 29- அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு ‘ஃடேப்’ வழங்கும் திட்டம் தேர்தலுக்குப்பிறகு முதலமைச்சர் அறிவிப்பார்என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவி த்தார். சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20ஆவது கொரோ னா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் ்கள்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இதுவரை 9,39,87,972 பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த முகாம் முலம் 90 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள முதல் தவணை தடுப்பூ சியை 5,20,29,899 பேர் (88.19 விழுக்காடு) செலுத்தி உள்ளனர். இரண்டாம் தவனை தடுப்பூசியை 3,90,21,718 (67.41 விழுக்காடு) பேரும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 33.46 லட்சம் தகுதி பெற்றுள்ளனர். அதில் 25,91,788 (77.46 விழுக்காடு) பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் 10ஆம் தேதி தொடங்க ப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி போட வெள்ளிக்கிழமை வரை 4,48,394 பேர் கண்டறியபட்டனர். அதில் 3,44,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் ்பட்டுள்ளது. 97 லட்சம் பேர் 2ஆவது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப் பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 100 விழுக்காடு செலுத்திய 2,669 ஊராட்சி களும், 24 நகராட்சிகளும் உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத் துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் வழங்க திட்டம் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்கு வது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.