tamilnadu

முழு உடல் பரிசோதனைக்கான ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’

முழு உடல் பரிசோதனைக்கான  ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 4 - ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ விரைவில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகம் அரங்கில், புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது இதுபற்றி அவர் கூறியதாவது: “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த லின் படி சட்டமன்றத்தில் 118 புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு செயலாக்கப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில் வியாழக்கிழமை (ஜூன் 5) ‘வணி கர்களைத் தேடி மருத்துவம்’ சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இது வரை 2 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரத்து 215 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மருத்துவம், பொது  அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, மகப்பேறு  மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்து வம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்து வம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் என அனைத்தும் அவரவர் இடங்களுக்கு சென்று மருத்துவம் அளிக்க உள்ளோம்” என்று கூறினார். புதிதாக, “’மாஸ்டர் செக்கப்’ என்று சொல்லக் கூடிய முழு உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனையில் கூட ரூ. 4 ஆயிரம் வரை செலவாகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ. 10 ஆயிரம் முதல்  ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் ஒரு  ரூபாய் கூட செலவு இல்லாமல் முழு உடல் பரிசோ தனை செய்து கொள்ள உதவும் ‘நலம் காக்கும்  ஸ்டாலின் திட்டம்’ 10 முதல் 15 நாட்களில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் சுகாதாரத்துறையின் அனைத்து  திட்டங்களுக்கும் முன்னோடித் திட்டமாக விளங்கும்.  தமிழ்நாடு சுகாதாரத் துறையின் முன்னெடுப்பு களால் மாநகரப் பகுதிகளில் மட்டுமே இருந்த டயாலி சிஸ் முறை தற்போது நகரம் மற்றும் கிராமங்களி லும் செயல்படுகிறது” என்றும் அமைச்சர் தெரி வித்தார்.