tamilnadu

img

மாட்டு வண்டியில் சென்று மனு அளித்த எம்.பி.,

அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவை ரயில் நிலையத்தை மையப்படுத்தி கோவை ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி., வலியுறுத்தியுள்ளார்.  கோவை ரயில் நிலையத்தின் வழி யாக இயக்கப்படாமல் போத்தனூர், இரு கூர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும், ஆலப்புழா சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி திப்ரூகர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் , கொச்சுவேலி யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.  கோவை ரயில் நிலையம் எதிரே  உள்ள கீதா கபே பகுதியில் இருந்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர்

தொடரும் கோரிக்கைகள்

இந்த போராட்டத்தை கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்து பேசுகையில், ‘‘வட மாநிலத்தில் இருந்து வரும் ஆறு விரைவு ரயில்களை கோவையை புறக்கணித்து பீளமேடு போத்தனூர் வழி யாக இயங்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பொள்ளாச்சி திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோ வில், தூத்துக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்கிட வேண்டும். கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்கிய வேண்டும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்களில் கோவை வந்து  செல்லும் ரயில்களை நிறுத்திட வேண்டும். கோவை மேட்டுப்பாளையம் வழித்தடத்தை இருவழிப்பாதையாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து பயணிகளின் தேவை அறிந்து கோரிக்கை வைக்கிறோம். மக்களும் கோரிக்கை வைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தீர்வுதான் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு

ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதின் இதன்ஒருபகுதிதான் இதுவும். எனவே தான் கோவை ரயில் நிலையத்தின் தேவைகள் குறித்து கோரிக்கைகள் விடுத்தும், ஒன்றிய அரசும், ரயில்வே  நிர்வாகமும் கேட்க மறுத்து வரு கின்றன. பாலக்காடு கோட்டத்தில் இருந்து கிணத்துக்கிடவை பிரித்து சேலம் கோட்டத்தோடு உடனடியாக இணைக்க வேண்டும். எதிர்காலத்தில் வருவாயை அதிகமாக கொடுக்கும் கோவையை மையப்படுத்தி கோவை கோட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி நமது உரிமைகளை வென் றெடுப்போம்’’ என்றார். முன்னதாக இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திமுக  கோவை மாநகரத் துணைச் செய லாளர் அப்பாஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம், சிபிஐ சார்பில் ஜேம்ஸ், மதி முக சார்பில் தியாகராஜன், விசிக சார்பில் கோவை குரு உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற னர்.