tamilnadu

img

நீங்கள் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - ஆளுநருக்கு உத்தவ்தாக்ரே பதிலடி

மகாராஷ்டிர ஆளுநரின் இந்துத்துவா சான்றிதழ் தனக்கு தேவை இல்லை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கோயில்களை மீண்டும் திறப்பது குறித்து முதல்வர் உத்தவ்தாக்ரே மற்றும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி  இடையேயான விவாதம் நீடித்து வருகிறது-  மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மதுபான விடுதிகள் மற்றும் உணவகளங்கள் திறக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயில்களை திறக்காமல் மதுபான விடுதி களை திறக்க அனுமதி அளித்தது குறித்து அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.0
அதில் ‘‘தளர்வுகளை தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா? அல்லது திடீரென்று மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’’ என கடிதம் எழுதியிருந்தார்.

 இதையடுத்து அந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள உத்தவ் தாக்கரே உங்கள் கடிதத்தில் எனது இந்துத்துவா குறித்து கேள்வி எழுப்பி உள்ளீர்கள் ஆனால் உங்களிடம் இருந்து எனது சித்தாந்தம் மற்றும் இந்துவா குறித்து சான்றிதழ் எனக்கு தேவையில்லை. நான் வேறு யாரிடமிருந்தும் இந்துத்துவாவை கற்றுக்கொள்ள தேவை இல்லை என்று விமர்சித்துள்ளார். 
மேலும் மகாராஷ்டிரத்தை அவமதித்து மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்று அழைத்த ஒருவரை நீங்கள் சந்தித்தது அவரை உங்கள் வீட்டிற்கு வரவேற்றிருப்பது நான் பின்பற்றும் இந்துத்துவத்தின் சித்தாந்தம் இல்லை. நீங்கள் திடீரென்று மதச்சார்பற்றவராக மாறி விட்டீர்களா என உத்தவ் தாக்கரே ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.