மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே மகாராஷ்டிர அரசுதான் விடுதலை செய்தது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின்போது துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவினார் நடிகர் சஞ்சய் தத் என்று புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவரது நன்னடத்தையை காரணம் காட்டி தண்டனைக்காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே மகாராஷ்டிர அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி விடுவித்தது. இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்புகள் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் முடிவு எடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையடுத்து சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் பேரறிவாளர் விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தெரிவித்துள்ளார்