tamilnadu

img

மகாராஷ்டிரா : முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக கேரள இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள #தமிழக-#கேரள இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் #DYFI உடனடி தலையீடு . 

தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரிலுள்ள அறிவாய் ஹரி பாய் தேவ்கன் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் அந்த பள்ளியில் உள்ள ஒரு சில வகுப்பறைகளில் மிக நெருக்கமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் பல வகுப்பறைகளை கொண்ட பெரிய பள்ளி ஆனாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஒருசில வகுப்பறைகளை ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில் அந்த தொழிலாளிகள் நெருக்கடியான தங்கும் அறைகளில், போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் தரமான உணவு மற்றும் போதுமான குடிநீர் ஆகியவை வழங்கப்படாமல் மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளனர் .  இதன் காரணமாக அந்த தொழிலாளர்கள் பள்ளி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த மகாராஷ்டிரா காவல்துறையினர் அவர்கள் மீது ஏப்ரல் 4ஆம் தேதியன்று காலை கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் பலர் காயமடைந்தனர். 

 இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிர மாநில செயலாளர் தோழர் ஆதம் மாஸ்டர் சோலாப்பூரை சேர்ந்த மாநில அமைச்சரிடம் ஜிதேந்திர அவ்ஹத் அவர்களிடம் தொலைபேசியில் பேசினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும் தடியடி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் . 

வாலிபர் சங்கத்தின் சோலாப்பூர் மாவட்டக்குழு சார்பில் காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது மேலும் நகராட்சி ஆணையரை சந்தித்து தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அணில் வசம் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் வலியால் விஜய் ஹசாரே ஆகியோர் முகாம் அமைக்கப்பட்டிருந்த பள்ளிக்கு நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்தனர் அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்ததோடு குடிநீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 
ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் உணவு தயாரித்து வழங்கவும் DYFI ஏற்பாடு செய்துள்ளது. 
நடைபெற்ற சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வருக்கு , வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், சோலாப்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தரமான தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்துதரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது . 

#சோலாப்பூர் நிகழ்வுகளை உடனடியாக, #மகாராஷ்டிரா மாநிலக்குழு கவனத்திற்கு கொண்டு வந்த DYFI  #கோவை மாவட்ட செயலாளர் தோழர் கனகராஜ் மற்றும் இடுக்கி மாவட்ட இளைஞர் ஆஷிக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

DYFI Idukki DYFI Kerala DYFI - Democratic Youth Federation of India