tamilnadu

img

மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சாவனுக்கு கோவிட்-19 பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சாவனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஏற்கனவே வீட்டு வசதி துறை அமைச்சர் ஜித்தேந்திர அவாத், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், தற்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சாவனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறிகள் எதுவுன் காணப்படவில்லை என்றும், தற்போது அவரது சொந்த ஊரான நந்தேடில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.