மும்பை:
தென்மேற்கு பருவமழை ஞாயிறன்று கேரளாவில் தொடங்கியது. பருவமழை தொடங்கிய இரண்டே நாளில் மும்பையில் மழை தொடங்கியது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், வாயு புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாயு புயலால் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தரைஇறங்குவதற்கும், புறப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மும்பை செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.