tamilnadu

img

பழைய இரும்புக்கடையில் ராணுவ துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் பலி

மகாராஷ்டிராவில் பழைய இரும்புக்கடைக்கு விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி வெடித்ததில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் கரே கர்ஜூன் கிராமத்தில் பழைய இரும்புக்கடையில் இன்று அதிகாலை விற்பனைக்கு வந்த பொருட்களிலிருந்து உலோகங்களை பிரிக்கும் பணி நடைபெற்றது. அவர்களிடம் விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி ஒன்றை எடுத்து அதிலிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அக்ஷய் நவநாத் கெய்க் வாட், சந்தீப் சாஹோப் திரோட் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ் டாடாலே தெரிவித்துள்ளார்.