புதுதில்லி, ஜூலை 27- நாடாளுமன்ற மக்கள வையில் வெள்ளியன்று 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லி பா.ஜனதா எம்பி.யுமான கவுதம் கம்பீர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தார். தவறான சிகிச்சை அளித்ததாக கூறி நோயாளிகளின் உறவினர் கள் மருத்துவர்களை தாக்கு வதை தடுக்க வேண்டும் என அவர் வலி யுறுத்தினார். இதைப்போல நாட்டில் இருந்து மரண தண்ட னையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவை தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார். மேலும் கருணைக் கொலையை ஒழுங்குபடுத்த வகை செய்யும் மசோதா ஒன்றை பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருகரி மக்தாப் தாக்கல் செய்தார். ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் தாக்கல் செய்த கட்டாய ஓட்டளிப்பு மசோதா வுக்கு உறுப்பினர்கள் பரவ லாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதைத்தவிர ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய் வது, போலி செய்திகளை தடு ப்பது போன்ற மசோதாக் களும் எம்.பி.க்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.