tamilnadu

img

தனியார் செல்போன் டவர் அமைக்க பெண்கள் எதிர்ப்பு

மன்னார்குடி நவ.8- தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் பெண்கள் தன்னிச்சையாக மறியலில் ஈடு பட்டனர். பெண்களின் எதிர்ப்பின் காரணமாக கட்டுமான தொழிலா ளர்கள் வேலையை நிறுத்தினர். மன்னார்குடி புறநகரில் அசேஷம் ஊராட்சியைச் சேர்ந்த பாரதி தாசன் நகரின் காட்டு மல்லித்தெரு வில் இந்த மறியல் நடை பெற்றது. அசேஷன் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி.ஜி. மணி கண்டன். சிபிஎம் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், சிபிஐ நகர துணைச் செயலாளர் என். தனிக் கோடி, எம். சந்திரசேகரன், அருள்மொழி ஆகியோர் முன்னி லையில் பெண்கள் திரண்டு வந்து கட்டுமான வேலைகள் மேற்கொண்டு  நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர். உடல் நலத்தில் நுண் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த செல்போன் கோபுரத்தை எங்கள் பகுதியில் அமைக்க விட மாட்டோம் என்று அவர்கள் ஒரே குரலில் கூறினர்.  முன்னாள் தலைவர் டி.ஜி. மணிகண்டன் கூறும்போது, இந்தப் பகுதியை வேலி வைத்து  அடைத்து விடுவோம். இனி மேற்கொண்டு கட்டுமான வேலை கள் நடைபெறாமல் தடுத்து விட்டோம். இந்தப்பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைக்க விட மாட்டோம் என்று உறுதியளித்தார். அதன் அடிப்ப டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட் டத்தை கைவிட்டனர். 

சிபிஎம் நகர செயலாளர் எஸ். ஆறுமுகம் கூறும்போது, செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் மின்காந்த  அதிர் வெண்கள்  எப்.எம் ரேடியோ, டிவி மற்றும் மடிக்கணினிகள் போன்றவை தான் என தொலைத் தொடர்பு துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் கூறு கின்றன. ஆனால் நடைமுறையில் அவை வெளிப்படுத்தும் ரேடி யோ அதிர்வெண்கள் அளவு கடந்தவைகளாகவும் நுண் தீங்கு விளைவிப்பதாக உள்ளன என்ப தற்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் நிர்ண யித்துள்ள மின்காந்த அதிர்வெண்கள் மற்றும் அதன் கதிர்வீச்சு வரம்பெல்லையை தனியார் நிறுவனங்கள் மீறு கின்றன. பிஎஸ்என்எல் மட்டுமே தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் வரம்பை பின்பற்றுகிறது.  இந்த செல்போன் கோபுரம் அமைப்பதற்கு இந்த தனியார் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றதாகவும் தெரியவில்லை என்று எஸ். ஆறுமுகம் கூறினார்.