கடலூர் மாவட்டம் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கி இருப்பது,குடிநீர் வசதி கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இந்திய மாணவர் சங்கத்தின் கிளைச் செயலாளர் கலைவேந்தன், மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட துணைச் செயலாளர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.